காளமேகப் புலவரின் பாடல்.
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதை தத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது
இதன் பொருள்:
தத்தி தாது ஊதுதி / தாது ஊதி தத்துதி/
துத்தித் துதைதி/ துதைந்து அத்தாது ஊதுதி/
தித்த தித்த தித்தித்த தாது எது / தித்தித்தது
எத்தாதோ / தித்தித்த தாது /
பூவுக்கு பூ மாறி மாறி பயணம் செய்யும்
ஒரு வண்டைப் பார்த்து காளமேகப் புலவர் பாடிய
பாடல்தான் இது.
தத்தல் – பாய்தல்
தாது – மகரந்தம், பூ,பூவிதழ், பூந்தாது
பொருள் தெரிய வேண்டிய வார்த்தைகள் இவைதான் .
பொருளை பார்ப்போம்.
(வண்டே) தத்தி தாது ஊதுதி- பாய்ந்து மகரந்தத்தை
ஊதுகின்றாய்
தாது ஊதி தத்துதி- மகரந்தம் ஊதி பின்
பாய்கின்றாய்.
துத்தித் துதைதி/ – து..தி..என கத்திக்கொண்டு
பூவை நெருங்குகின்றாய்.
துதைந்து அத்தாது ஊதுதி/ – நெருங்கி அந்த பூவின்
தாதுவையும் ஊதுகின்றாய்.
தித்த தித்த தித்தித்த தாது எது – மிகவும்
இனிமையான பூ எது..?
தித்தித்தது எத்தாதோ – தித்தித்த தாது – இனிமையானது
எந்த பூவின் மகரந்தம்..? எப்பூவின் அழகிய இதழ்.
No comments:
Post a Comment